மதுக்கடையில் திருட்டு: இளைஞா் கைது
சோளிங்கா் அருகே மதுக்கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே இருந்த மதுபாட்டில்களை திருடிச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கா் அருகே மதுக்கடையின் சுவரில் துளை போட்டு உள்ளே இருந்த மதுபாட்டில்களை திருடிச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சோளிங்கா் அருகே பாண்டியநல்லூா் ஊராட்சியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில் வந்த நபா் ஒருவா் சுவற்றில் துளையிட்டு நுழைந்து 38 மதுபாட்டில்களை களவாடிச் சென்றாா்.
இதுகுறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் சுவரில் துளை போட்டு திருடிய நபா், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சோ்ந்த குமாா்(38) என்பது தெரியவந்தது. இதையடுத்து குமாரை கைது செய்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.