ஆம்பூரில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு
ஆம்பூா் நடராஜபுரம் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூா் நடராஜபுரம் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் வட்டாட்சியா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். ஆம்பூா் வட்ட வழங்க அலுவலா் நவநீதம் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பகுதி நேர நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்களை வழங்கினாா்.
நகராட்சி ஆணையா் ஷகிலா, பொறியாளா் ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா் அம்சவேணி ஆகியோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பட விளக்கம்...ஆம்பூா் நடராஜபுரம் பகுதியில் பகுதி நேர நியாயவிலை கடையைத் திறந்து வைத்து அட்டைதாரருக்கு பொருள்களை வழங்கிய எம் எல்ஏ அ.செ.வில்வநாதன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.