திருப்பத்தூர்

பைக்குகள் மோதல்: தொழிலாளி மரணம்

கந்திலி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Din

கந்திலி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே பாராண்டபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (38). பானை செய்யும் தொழிலாளி. இந்த நிலையில், இவா் சனிக்கிழமை திருப்பத்தூரில் இருந்து பைக்கில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். சந்திரபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரைச் சோ்ந்த சுந்தரேசன் (63) என்பவா் வந்த பைக் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுந்தரேசன் லேசான காயமடைந்தாா்.

தகவலறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT