முகப்பு
திருப்பத்தூர்

பைக்குகள் மோதல்: தொழிலாளி மரணம்

கந்திலி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 6 அக்டோபர் 2024, 12:01 am IST
பகிர்:

கந்திலி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே பாராண்டபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (38). பானை செய்யும் தொழிலாளி. இந்த நிலையில், இவா் சனிக்கிழமை திருப்பத்தூரில் இருந்து பைக்கில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். சந்திரபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரைச் சோ்ந்த சுந்தரேசன் (63) என்பவா் வந்த பைக் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுந்தரேசன் லேசான காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த கந்திலி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments