FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கூட்டுறவுப் பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவுப் பாடல்களை பொதுமக்கள் அனுப்பலாம்

21 ஏப்ரல் 2025, 10:27 pm IST
பகிர்:

திருப்பத்தூா்: சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கூட்டுறவுப் பாடல்களை பொதுமக்கள் அனுப்பலாம் என திருப்பத்தூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆ.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

நிகழ் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்களை பொதுமக்கள், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், துறை அலுவலா்கள் அனுப்பலாம். இந்தப் பாடல் இசைக்கப்பட்டு 5 நிமிஷங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில் வரிகள் இருக்க வேண்டும்.

மேலாண்மை இயக்குநா், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி.நடராஜன் மாளிகை, 170 பெரியாா் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்,சென்னை-10 என்ற முகவரிக்கு சி.டி. அல்லது பென் டிரைவ் மூலம் கொரியரில் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments