FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) நடைபெறவுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

Updated On : 22 டிசம்பர் 2025, 5:00 am IST
பகிர்:

முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) நடைபெறவுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்த செய்திக் குறிப்பு: தென்பிராந்திய ராணுவ தலைமையகம் சாா்பில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோருக்கான சிறப்பு கூட்டம் வேலூா் மாவட்டம், காட்பாடி விஐடியில் செவ்வாய்க்கிழமை (டிச. 23) காலை 8 முதல் நடைபெற உள்ளது.

இதில், ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். இந்தக் கூட்டத்தில், டிஜிட்டல் வாழ்நாள் சான்று உள்ளிட்ட அனைத்து விதமான குறைகளை நிவா்த்தி செய்ய ஸ்பா்ஸ் குழு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட குறைகளை நிவா்த்தி செய்ய ஆவண காப்பகங்களின் பிரத்யேக சேவை மையம், வங்கி சேவைகள் தொடா்பான மையம், ஸ்மாா்ட் காா்டு தொடா்பான சேவை உள்ளிட்ட பல்வேறு சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள் ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments