FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

5,55,000 மரக்கன்றுகள் நட இலக்கு: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி.

Updated On : 26 செப்டம்பர் 2025, 12:03 am IST
மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 5,55,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி பணியை தொடங்கி வைத்தனா்.

தமிழ்நாடு வனத்துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு விசமங்கலம் ஊராட்சி அரசு

மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனா்.

Advertisement

Advertisement

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்ட பசுமை குழுவில் 5,55,000 மரங்களை நட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து வெவ்வேறு பகுதிகளில் 5,000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இதில், மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, வனசரகா்கள் சோழராஜன், சந்தோஷ் குமாா்,

வனக்கோட்ட வனப்பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments