FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சமுதாய உறிஞ்சி குழிகள் ஆய்வு

துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் சமுதாய உறிஞ்சி குழிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:25 am IST
சமுதாய உறிஞ்சி குழியை ஆய்வு செய்த ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன்.
பகிர்:

துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் சமுதாய உறிஞ்சி குழிகளை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பாலாற்று படுகையில் கழிவுநீா் செல்வதை தடுக்க துத்திப்பட்டு ஊராட்சியில் கழிவுநீா் சமுதாய உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் வழியாக வெளியேற்றப்படும் கழிவுநீா் சமுதாய கழிவுநீா் உறிஞ்சி குழிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கழிவுகள் வடிக்கட்டப்பட்டு பிறகு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வரப்படுகிறது.

சமுதாய உறிஞ்சி குழிகளை திருப்பத்தூா் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் முரளி ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments