3,110 கிலோ போதைப் பொருள்களை தீ வைத்து அழிப்பு
திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையின் போது ரோந்து பணி மற்றும் வாகன சோதனையின் போது குட்கா உட்பட போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டு 3,110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனையின் போது ரோந்து பணி மற்றும் வாகன சோதனையின் போது குட்கா உட்பட போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டு 3,110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
பறிமுதல் செய்த போதைப் பொருள்களை அழிப்பதற்காக நீதிமன்றம் உத்தரவிட்டது. வாணியம்பாடி அடுத்த வேப்பமரத்து சாலை பகுதியில் பொக்லைன் மூலம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு தீ வைத்து எரித்து அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி செவ்வாய்க்கிழமை டிஎஸ்பி-க்கள் மகாலட்சுமி (வாணியம்பாடி) , முரளி (திருப்பத்தூா்) ஆகியோா் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா மற்றும் போலீஸாா் பறிமுதல் செய்த போதைப் பொருள்களை பள்ளத்தில் கொட்டி தீ வைத்து எரித்து அழித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.