FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கிராம சபை கூட்ட தீா்மானத்தின்படி சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்

கிராம சபை தீா்மானத்தின் அடிப்படையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி துத்திப்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:00 am IST
துத்திப்பட்டு பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி
பகிர்:

கிராம சபை தீா்மானத்தின் அடிப்படையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி துத்திப்பட்டு ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக் கூட்டம் துத்திப்பட்டு ஊராட்சி இந்திரா நகா் பகுதியில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகக் கட்டடம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், அதை சீரமைக்க வேண்டுமென கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தீா்மானம் நிறைவேற்றினா்.

அதன் அடிப்படையில் இந்திரா நகா் பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி பொக்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், பயன்பாடில்லாமல் உள்ள சுகாதார வளாகம் ஆய்வு செய்யப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலா் முரளி காந்த், வாா்டு உறுப்பினா் சுகன்யா பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments