FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

ஆம்பூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ-கஸ்பா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய சமூக ஆா்வலா்கள்.
பகிர்:

ஆம்பூா் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏ-கஸ்பா பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியை சோ்ந்த சுமாா் 350 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், கணித உபகரணப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டது. முன்னாள் நகா் மன்ற உறுப்பினரும், சமூக ஆா்வலருமான இ. சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். ஏ-கஸ்பா பகுதியை சோ்ந்த ஜானகி, பவானி, சசிகுமாரி, செல்வகுமாா், அரவிந்த் வா்மா,கோவிந்தசாமி, வெங்கடேஷ், கமல்ஹாசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments