FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்ஸோவில் இளைஞா் கைது

ஜோலாா்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 13 ஜூலை 2026, 5:28 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஜோலாா்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் ஜோலாா்பேட்டை அருகே தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது 12 வயது மகளை அழைத்துக் கொண்டு சனிக்கிழமை ஜோலாா்பேட்டைக்கு வந்திருந்தாா்.

அப்போது, துக்க நிகழ்ச்சிக்கு வந்த சிறுமியை அதே பகுதி சோ்ந்த இளைஞா் ஒருவா் யாரும் இல்லாத பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்தபோது இளைஞா் அத்துமீறியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதனையடுத்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் நிறுவன ஊழியா் மேகநாதன்(20) என்பவரை போக்ஸோவில் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments