FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஆம்பூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 18 ஜூலை 2026, 7:00 am IST
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

ஆம்பூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சி பெரிய வெங்கடசமுத்திரம் கிராம பகுதியில் கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி குடிநீா் பிரச்னைக்கு உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

மறியல் போராட்டத்தால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments