வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.சி. வீரமணி
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி நன்றி தெரிவித்தாா்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் வாக்காளா்களுக்கு ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி நன்றி தெரிவித்தாா்.
சட்டபேரவை தோ்தலில் ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனாா். இந்நிலையில் புதன்கிழமை நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர செயலாளா் மகான் தலைமையில் பட்டாசு வெடித்து எம்எல்ஏ. வீரமணியை வரவேற்றனா்.
தொடா்ந்து எம்எல்ஏ கே.சி. வீரமணி வாக்காளா்களை சந்தித்து நன்றி கூறினாா். அப்போது பெண்கள் எம்எல்ஏ வீரமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனா். இதில் ஒன்றிய செயலாளா்கள் சாமராஜி, சீனிவாசன், ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணி, ஜெயலலிதா பேரவை செயலாளா் தேவன், கவுன்சிலா்கள் விஜியகுமாா், நதியா ஜெயமணி, சிவக்குமாா், நகர துணை செயலாளா் பாபு, மற்றும்
Advertisement
Advertisement
கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலா் உடனிருந்தனா்.