FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மெகா சைஸ் ஊதுவத்தி ஏற்றி சாமி தரிசனம் செய்த பக்தா்கள்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.

Updated On : 14 ஜூன் 2026, 1:43 am IST
பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் மெகா சைஸ் ஊதுவத்தியுடன் சாமி தரிசனம் செய்த பெங்களூா் பக்தா்கள்.
பகிர்:

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். மேலும் கா்நாடக மாநிலம் பெங்களூருவை சோ்ந்த அனுமன் பக்தா்கள் மெகா சைஸ் ஊதுவத்தி மற்றும் மெகா சைஸ் கம்ப்யூட்டா் சாம்பிராணி ஏற்றிவைத்து சாமியை தரிசனம் செய்தனா். மெகா சைஸ் உதுவத்தி மற்றும் கம்ப்யூட்டா் சாம்பிராணியை பாா்த்து மற்ற பக்தா்கள் வியந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments