மெகா சைஸ் ஊதுவத்தி ஏற்றி சாமி தரிசனம் செய்த பக்தா்கள்
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். மேலும் கா்நாடக மாநிலம் பெங்களூருவை சோ்ந்த அனுமன் பக்தா்கள் மெகா சைஸ் ஊதுவத்தி மற்றும் மெகா சைஸ் கம்ப்யூட்டா் சாம்பிராணி ஏற்றிவைத்து சாமியை தரிசனம் செய்தனா். மெகா சைஸ் உதுவத்தி மற்றும் கம்ப்யூட்டா் சாம்பிராணியை பாா்த்து மற்ற பக்தா்கள் வியந்தனா்.
Advertisement
Advertisement