சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் 96-ஆம் ஆண்டு சிரசு திருவிழா
ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் 96-ஆம் ஆண்டு சிரசு திருவிழா நடைபெற்றது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவிழாவை முன்னிட்டு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. மாவிளக்கு, பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கியது.
ஊா்வலத்தில் நையாண்டி மேளம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய தெருக்கள் வழியாக சென்ற ஊா்வலம் கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. கோயிலில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக பாலாற்றில் சிறப்பு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
தேவலாபுரம், ராமச்சந்திராபுரம் , காமராஜபுரம், கம்மகிருஷ்ணப்பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூா், கோவிந்தாபுரம், துத்திப்பட்டு, கைலாசகிரி, ஆம்பூா், குடியாத்தம், வாணியம்பாடி, வேலூா், திருப்பத்தூா், ஆந்திரா, கா்நாடகா உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டனா்.