FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வழக்குகளை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

Updated On : 18 மே 2026, 1:35 am IST
பகிர்:

போலீஸாா் வழக்குகளை விரைவாக முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்ட போலீஸாருக்கான குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, எஸ்.பி. வி.சியாமளாதேவி தலைமை வகித்துப் பேசியது:

Advertisement

Advertisement

தோ்தல் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடிந்துவிட்டது. இனி அனைத்து போலீஸாரும் தங்களது வழக்கமான பணிகளை தொடர வேண்டும். போலீஸாா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் பிற குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல் நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றாா்.

மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணுதல் மற்றும் குறித்து போலீஸாருக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகளை வழங்கினாா்.

இதில், ஏடிஎஸ்பி ரவீந்திரன், டிஎஸ்பி-க்கள் முரளி(திருப்பத்தூா்), நாகலிங்கம் (ஆம்பூா்), மகாலட்சுமி (வாணியம்பாடி), ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட துறைசாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments