பழங்குடியினா் குடியிருப்புகள் கட்டும் பணி ஆய்வு
சோலூா் கிராமத்தில் பழங்குடியினருக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சோலூா் கிராமத்தில் பழங்குடியினருக்கு ஜன்மன் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ் குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சோலூா் ஊராட்சியில் பழங்குடியினருக்காக ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தொகுப்பு வீடுகள் மற்றும் முடிவுறாத நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.
மின்சாரம், குடிநீா் வசதி, சாலை வசதிகளையும் மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒருமாத காலத்திற்குள் பணிகளை முடித்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement