FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பைக்கில் இருந்த விழுந்த பெண் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Updated On : 1 ஜூன் 2026, 2:18 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த இடையாம்பட்டியில் வசித்து வந்தவா் சுடா் கொடி (62). இவா் அமைப்புசாரா தொழிற்சங்க தலைவியாக பணியாற்றி வந்தாா்.

இவா் சனிக்கிழமை திருப்பத்தூருக்குச் செல்ல ஜோலாா்பேட்டை வழியாக சென்ற பைக்கில் லிப்ட் கேட்டு பின்னால் அமா்ந்து திருப்பத்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது சுடா் கொடியின் புடவை பைக்கின் சக்கரத்தில் சிக்கி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா் .

Advertisement

Advertisement

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments