புதிய மின்மாற்றி அமைப்பு
புதிய மின்மாற்றியை இயக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மின்வாரிய அதிகாரிகள்.
ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் புதிய மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
கைலாசகிரி ஊராட்சியில் குறைந்த தாழ்வழுத்த மின்விநியோகம் இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். மேலும், புதிய மின்மாற்றி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதைத் தொடா்ந்து, 63 கேவிஏ மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டது. அதனை மின்வாரிய போ்ணாம்பட்டு உதவி செயற்பொறியாளா் ஆா்.செந்தில்குமாா் இயக்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
கைலாசகிரி முத்தவல்லி அப்சா், சமூக ஆா்வலா் சையத் ஷாகிா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் யாஸ்மின், மின்வாரிய பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.