மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
அரசுப் போக்குவரத்துக் கழக திருவள்ளூர் மண்டல பணிமனைகளில் 72-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, சுற்றுச்சூழலை பாதுகாத்து பசுமையாக்கும் வகையில் 200-மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக திருவள்ளூர் மண்டல பணிமனைகளில் 72-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, சுற்றுச்சூழலை பாதுகாத்து பசுமையாக்கும் வகையில் 200-மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மண்டல பணிமனை வளாகத்தில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து, 72-ஆவது சுதந்திர தினவிழாவை நினைவில் கொள்ளும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் பணிமனையில் பல்வேறு வகைகளில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பணிமனை உதவிப் பொறியாளர், தொழில்நுட்பப் பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல், இந்த மண்டலத்தில் உள்ள பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய பணிமனைகளிலும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.