FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்திடம் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து ராணிப்பேட்டையில் வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்

Updated On : 8 ஜூன் 2018, 2:50 am IST
பகிர்:

முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரத்திடம் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதைக் கண்டித்து ராணிப்பேட்டையில் வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஐஎன்எக்ஸ் நிதி முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராணிப்பேட்டை முத்துகடை காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் எஸ். அண்ணாதுரை தலைமை வகித்தார். வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம், மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு தலைவர் வி. நாகேஷ், மாவட்ட மகளிர் அணி தலைவர் சந்திரா, மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் ராணி கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் கே.முருகன் வரவேற்றார்.
இதில், நாங்குனேரி எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான எச்.வசந்தகுமார் பங்கேற்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments