முகப்பு
திருவள்ளூர்

21 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஆந்திரத்தில் புதுச்சேரி செல்லும் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

ஆந்திரத்தில் புதுச்சேரி செல்லும் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபாஸ் கல்யாண் ரயில்கள் மூலம் கஞ்சா கடத்துவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், எஸ்.பி. தனிப்படையினா் வியாழக்கிழமை திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆந்திரத்தில் இருந்து வரும் புதுச்சேரி செல்லும் ரயிலில் அதிரடி சோதனை நடத்தினா். இதில் சந்தேகம் படும்படியாக இருந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.