FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!

கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தியுள்ளது பற்றி...

Updated On : 26 ஜூலை 2026, 10:05 am IST
கார்கில் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய அமைச்சர் ரஜ்நாத் சிங். - படம் - பிடிஐ
பகிர்:

கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில், கார்கில் போர் வெற்றி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

கார்கில் போர் குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கார்கில் வெற்றி நாளை முன்னிட்டு, நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன். 1999 ஆம் ஆண்டு கார்கிலின் மலைகளில் அபாரமான வீரத்தை வெளிப்படுத்திய அந்த வீரர்கள் அனைவருக்கும் நாடு என்றென்றும் நன்றியுடனும் கடமையுடனும் இருக்கும்.

இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத வீரம், தியாகம் மற்றும் உறுதி ஆகியவை வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

summary

Union Defence Minister Rajnath Singh laid a wreath and paid tribute at the Kargil War Memorial.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments