இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நன்றி: கார்கில் போர் நினைவுநாளில் பிரதமர் மோடி
கார்கில் போரில் இந்தியாவைக் காத்த வீரர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாவது...
கார்கில் போரில் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் நீட்சியாக, கார்கில் போர் வெற்றி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
கார்கில் போர் வெற்றி நாளன்று, இந்தியாவைப் பாதுகாப்பதில் காட்டிய துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நமது நாடு அந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.
மிகவும் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அவர்களின் வீரம், என்றென்றும் நாட்டின் பெருமையாக நிலைத்திருக்கும். அவர்களின் அசைக்க முடியாத நாட்டுப்பற்றும் கடமை உணர்வும் தலைமுறைகளைத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Prime Minister Narendra Modi expressed his gratitude on Sunday (July 26) to the soldiers who defended India during the Kargil War.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.