மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பிரதீப் அசோக்குமார் வெற்றி
திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர் -1,ஊராட்சி தலைவர்-1, வார்டு உறுப்பினர் பதவி-3 என 5 காலியிடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர் -1,ஊராட்சி தலைவர்-1, வார்டு உறுப்பினர் பதவி-3 என 5 காலியிடங்களுக்கு 12 பேர் போட்டியிட்டனர்.
இதற்கான தற்செயல் தேர்தல் கடந்த 9 ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அந்தநத ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதையும் படிக்க: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினருக்கான இடைத் தேர்தலில் திமுக வெற்றி
Advertisement
Advertisement
இதில் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாம்பாக்கம் ஊராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் பிரதீப் அசோக்குமார் 867 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் மணிமாறன் 445 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதில் 422 வாக்கு வித்தியாசம் ஆகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.