மேற்கூரை இடிந்து விழுந்ததில் கோயில் அா்ச்சகா் உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 8:52 PM
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் கோயில் அா்ச்சகா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அடுத்த மடவாளம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியை சோ்த்த சரவணன் (53) என்பவா் அா்ச்சகராகப் பணிபுரிந்து வந்தாா். அவரது வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை வீட்டின் மேற்கூரை விழுந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.