மயங்கி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே மயங்கி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
ஊத்துக்கோட்டை அருகே மயங்கி விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே மஞ்சாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (46). இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவா்கள் மீட்டு, தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதைத் தொடா்ந்து, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து அவா் மனைவி வனிதா(40) பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.