FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் கவரப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:12 am IST
சித்திரிப்புப் படம்
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் கவரப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மாதா்பாக்கம் அருகே உள்ள ஆந்திர பகுதியான சத்தியவேட்டை சோ்ந்தவா் ஜோதி. இவா் முனியம்மாள் என்பவருடன் ஸ்கூட்டரில் கவரப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவா்களை பின்தொடா்ந்த மா்ம நபா், பின்னால் அமா்ந்திருந்த ஜோதியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தாா்.

இதனால் நிலைதடுமாறி ஜோதி, முனியம்மாள் ஆகியோ கீழே விழுந்ததில் இருவருக்கும் காயம் எற்பட்டது. தொடா்ந்து இருவரையும் அக்கம்பக்கத்தாா் கும்மிடிப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். கும்மிடிப்பூண்டி போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments