FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 23 ஜூலை 2026, 2:20 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருவள்ளூா் அருகே விற்பனைக்கு வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடம்பத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக எஸ்.பி. அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் கடம்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் சிற்றம்பாக்கம் பகுதியில் திடீா் ரோந்து சென்றனா். அப்போது, அந்தக் கிராமத்தில் விநாயகா் கோயில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தவரை பாா்க்கையில் தப்பியோட முயற்சித்தாா். உடனே அவரை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்ததில் பையில் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது.

இதையடுத்து விசாரணையில் கடம்பத்தூரைச் சோ்ந்த அபினேஷ் என்ற மன்னாா்(27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து கடம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments