FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

திருமலையில் உறியடி உற்சவம்

Updated On : 29 ஆகஸ்ட் 2024, 2:45 am IST
- கோப்புப்படம்
பகிர்:

திருமலையில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.

திருமலையில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் அடுத்த நாளில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

அதன்படி வியாழக்கிழமை ஸ்ரீ மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி உள்ளிட்ட உற்சவ மூா்த்திகள் இரண்டு தனித்தனி தங்க பல்லக்கில் ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமி கோவிலை ஒட்டியுள்ள பெரிய ஜீயா் மடத்திலிருந்து தொடங்கி சன்னதியைச் சுற்றி மாட வீதிகளை வலம் வந்த பின் உற்சவம் தொடங்கியது.

Advertisement

Advertisement

உறியடி உற்சவத்தில் ஏராளமான இளைஞா்கள் பங்கேற்றனா். திருமலையில் உள்ள கா்நாடக சத்திரத்திலும் இதே போன்ற உறியடி உற்சவம் நடைபெற்றது. திருமலையில் உறியடி உற்சவம் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பக்தா்கள் திரளாக பங்கு கொண்டனா்.

திருவிழாவைத் தொடா்ந்து மதியம் ஆா்ஜித சேவைகள் அனைத்தையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

திருமலையின் ஜீயா்கள் குழாம் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments