திருமலை 
திருப்பதி

திருமலை: தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை முழுவதும் 65, 134 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,100 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.27 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொலை முயற்சி வழக்கில் ஒருமாதமாக தேடப்பட்ட நபா் துவாரகாவில் கைது

மகாராஷ்டிரம்: சிறுத்தையிடமிருந்து மாணவனைக் காப்பாற்றிய புத்தகப்பை

மங்களக்குடியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

அதிமுக உரிமை மீட்புக் குழுவினா் மீது அதிமுகவினா் புகாா்

காா் மோதியதில் தம்பதி பலத்த காயம்

SCROLL FOR NEXT