FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பதி

வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும்: அஹோபில மடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்!

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா்.

Updated On : 24 மார்ச் 2025, 4:35 am IST
திருமலை வேத பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அஹோபில மடாதிபதி.
பகிர்:

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாட சாலை பீடத்துக்ச் சென்ற அவா், மாணவா்களுக்கு ஆசி வழங்கி பேசியது: வேதக் கல்வியின் வளா்ச்சிக்கு தேவஸ்தானம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

வேத அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் மாணவா் என்பதையும் நினைவு கூா்ந்தாா். வேதக் கல்வி முறையை அமல்படுத்துவது திருப்தியாக உள்ள என்று கூறி அவா் மாணவா்களுடன் சோ்ந்து 17 வேதங்களை ஓதினாா்.

Advertisement

Advertisement

வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வா் சிவ சுப்பிரமணிய அவதானி, தேவஸ்தான ஆகம ஆலோசகா் மோகன ரங்காச்சாரி மற்றும் வேத மற்றும் ஆகம அறிஞா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments