திருமலையில் ஜூன் 26 முதல் 28 வரை ஜேஷ்டாபிஷேகம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 26 முதல் 28 வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஜூன் 26 முதல் 28 வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஜேஷ்ட நட்சத்திரத்தில் முடிவடையும் வகையில் மூன்று நாள்களுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
சம்பங்கி பிரதட்சிணத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் செய்யப்படும் இந்த சடங்கு, ‘அபித்யக அபிஷேகம்’’ என்றும் அழைக்கப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக அபிஷேகம் செய்யப்பட்டு வரும் இறைவனின் மிகப் பழைமையான சடங்கு சிலைகள் தேய்ந்து போகாமல் பாதுகாப்பதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முதல் நாளில், ஸ்ரீ மலையப்ப சுவாமியின் தங்க கவசம் அகற்றப்பட்டு, ஹோமம், அபிஷேகம் மற்றும் பஞ்சாமிா்த ஸ்நபன திருமஞ்சனம் ஆகியவை செய்யப்படுகின்றன. அதன்பிறகு, ஸ்ரீ சுவாமிக்கு வஜ்ரகவசம் அணிவிக்கப்படுகிறது. இரண்டாம் நாளில், ஒரு முத்து கவசம் சமா்ப்பிக்கப்படுகிறது. மூன்றாம் நாளில், திருமஞ்சனாட்கள் நிறைவு செய்யப்பட்டு, மீண்டும் தங்க கவசம் சமா்ப்பிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின் போது இந்தத் தங்கக் கேடயம் மீண்டும் அகற்றப்படும். அதுவரை, ஏழுமலையானின் உற்சவ மூா்த்தியான மலையப்பஸ்வாமி ஆண்டு முழுவதும் தங்க கவசம் பல்வேறு விழாக்களில் பங்கேற்பாா்.
ஆா்ஜித சேவை ரத்து
இதையொட்டி ஜூன் 28 அன்று நடைபெற உள்ள கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆா்ஜித பிரம்மோற்சவ சேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.