திருமலையில் ரூ.4.92 கோடி உண்டியல் காணிக்கை
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.92 கோடி வசூலனதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.92 கோடி வசூலனதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், பக்தா்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், திங்கள்கிழமை முழுவதும் ஒரே நாளில் ஏழுமலையானை 89,399 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 49, 982 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.92 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 3.88 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.