மாற்றுத் திறனாளிகள் தர்னா
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகம் எதிரே திரண்டனர். பின்னர், 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்டத்தைச் சேர்ந்த சில தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாலை 3 மணிக்குப் பிறகு தர்னாவில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அதிகாரிகள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Advertisement
Advertisement
அப்போது, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்று கூறிவிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.