விவசாயிகளுக்கு பால் பண்ணை, கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயி குமார் பண்ணையில் பால் பண்ணை மற்றும் கறவை மாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயி குமார் பண்ணையில் பால் பண்ணை மற்றும் கறவை மாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் கறவை மாடு வளர்ப்பு, புதிய இன மாடுகளின் வகைகள், நோய் பராமரிப்பு முறைகள், உணவு ஊட்ட முறைகள், அடர் தீவனம் தயாரித்தல் மற்றும் தீவனப்புல் புதிய ரகங்கள், தீவனப்புல் வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் துரைராஜ் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
Advertisement
Advertisement
இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பு.செ.சங்கீதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் இரா.ரவி, ச.ஜெயச்சந்திரன், பழனி (உழவன் நண்பன்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.