FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

மேற்கு ஆரணி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 9:28 am IST
பகிர்:

மேற்கு ஆரணி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 குண்ணத்தூரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற கட்சியினர் பாடுபட வேண்டும் என்றார்.
 கூட்டத்தில், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் அரையாளம் வேலு வரவேற்றார். முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவர் ஜெமினி கே.ராமச்சந்திரன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், மாவட்ட துணைச் செயலர் டி.கருணாகரன், நகர நிர்வாகி பாரி பி.பாபு, நகரச் செயலர் எ.அசோக்குமார், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், முன்னாள் கவுன்சிலர் ப.திருமால், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments