அருணாசலேஸ்வரர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, செல்கின்றனர். இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் கட்டண தரிசன வரிசை, பொது தரிசன வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயில் 2-ஆம் பிரகாரத்தில் வலம் வந்தனர். பக்தர்கள் பலர் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.