FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேரிடர் மீட்புப் பணி விழிப்புணர்வு முகாம்

போளூரை அடுத்த வசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

போளூரை அடுத்த வசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை இணைந்து இந்த முகாமை நடத்தின. இதில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், பொதுமக்கள், கால்நடைகளை வெள்ள பாதிப்புகளில் இருந்து காப்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தியாகராஜன், மண்டல துணை வட்டாட்சியர் முனிராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், தீயணைப்பு நிலைய அலுவலர் பழநிவேல் மற்றும் தலைமை ஆசிரியை சித்ரா, தீயணைப்பு வீரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, வருவாய்த் துறை சார்பில், கிராந்தோறும் பேரிடர் கால மீட்பு, முதல் தகவல் அளிக்கும் குழு அமைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments