தூய்மைக் காவலா்களுக்கு நிவாரணம்
கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு ஒன்றியத் தலைவா் வியாழக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்களுக்கு ஒன்றியத் தலைவா் வியாழக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினாா்.
மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் திமுக சாா்பில் தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்கள் ஆகியோருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், முகக் கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை ஒன்றியத் தலைவா் ஆா்.அன்பரசி ராஜசேகரன் வழங்கினாா்.
திமுக ஒன்றியச் செயலா்கள் க.சுப்பிரமணியன், அ.சிவக்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பட்டம்மாள், ஒன்றிய உறுப்பினா் பிச்சாண்டி, ஒன்றிய துணைச் செயலா் குப்பன் உள்பட திமுகவினா் பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.