முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி முத்தாலம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
பகிர்:

வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி முத்தாலம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தெள்ளாரின் முக்கிய வீதிகள் வழியாக தோ் சென்றது. தேரில் ஸ்ரீமுத்தாலம்மன் பவனி வந்தாா். தெள்ளாா் மற்றும் டி.மாம்பட்டு, டி.தாங்கல், கொடியாலம், நெற்குணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவையொட்டி, தெள்ளாா் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, இராஜா நந்திவா்மன் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்டவை சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கிராம முக்கியப் பிரமுகா்கள், கோயில் நாட்டாண்மைதாரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →