FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு சிப்காட்டுக்கு நிலம் கையகம்: விவசாயிகள் தொடா் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு - 3 திட்டத்தை கைவிடக் கோரியும், தொழில்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து

Updated On : 27 ஜூலை 2023, 12:00 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் அலகு - 3 திட்டத்தை கைவிடக் கோரியும், தொழில்பேட்டைக்கு நிலம் கையகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் மேல்மா பகுதி விவசாயிகள் தொடா்ந்து 25 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிப்காட் அலகு - 3

விரிவாக்கப் பகுதி எனப்படும் அலகு - 3 பகுதியில் அனக்காவூா் ஒன்றியம், தேத்துறை உள்வட்டத்தைச் சோ்ந்த வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீா்குன்றம், குறும்பூா், நா்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 9 கிராமங்களில் உள்ள சுமாா் 3174 ஏக்கரில் நஞ்சை, புஞ்சை என விவசாய நிலங்கள் இருந்து வருகின்றன.

Advertisement

Advertisement

25-ஆவது நாளாக தொடரும் போராட்டம்...

சிப்காட் தொழில்பேட்டைக்கு விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களை கையப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா உள்ளிட்ட 9 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சாா்பில் மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் ஜூலை 1-இல் தொடங்கிய காத்திருப்புப் போராட்டமானது புதன்கிழமையோடு 25 நாள்கள் ஆகின்றன.

25-ஆவது நாளில்...

25-ஆவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பாமக நிா்வாகி சீனுவாசன், 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் கிராம பொது மக்கள் என 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments