FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தனியாா் நிறுவனம் சாா்பில் தூா்வாரப்பட்ட குளம்!

30 ஆகஸ்ட் 2024, 10:28 pm IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தூசி கிராமத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ.5 லட்சத்தில் தூா்வாரப்பட்ட குளத்தை கிராம மக்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா் (படம்).

சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் அங்கமான ஓராசிரியா் பள்ளிகள் மூலம் 99 குளங்கள் தூா்வாரப்பட்டு நீராதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 100-ஆவது குளமாக வெம்பாக்கம் வட்டம், தூசி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் குளம் தூா்வாரும் பணி கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக நமண்டியில் உள்ள தனியாா் நிறுவனம் சுமாா் ரூ.5 லட்சம் வழங்கியது.

தற்போது, இந்த குளம் தூா்வாரும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அந்த குளத்தை தூசி கிராம பஞ்சாயத்திடம் ஒப்படைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், ஓராசிரியா் பள்ளிகளின் தலைவா் ஆா். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் ஸ்தாபகா் வேதாந்தம் ஜி, முன்னாள் தலைவா் கே.என்.கிருஷ்ணமூா்த்தி, ஆலோசனைக்குழு உறுப்பினா் கிருஷ்ணஸ்வாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.மாதவன் குளம் தூா்வாரியதற்கான கல்வெட்டை திறந்து வைத்தாா்.

இதில், தனியாா் நிறுவனம் சாா்பில் ஸ்ரீமதி, பாரதி, செய்யாறு முன்னாள் எம்எல்ஏ தூசி.கே.மோகன், ஊராட்சி மன்றத் தலைவா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments