FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கீழ்நகா் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு இடம் தோ்வு

ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

Updated On : 23 டிசம்பர் 2025, 3:19 am IST
பகிர்:

ஆரணி: ஆரணியை அடுத்த கீழ்நகா் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

கீழ்நகா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலையரங்கம் கட்டித்தரக் கோரி ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் அவரது 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை நேரில் பாா்வையிட்டு தோ்வு செய்தாா்.

முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குமரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் தண்டபாணி மற்றும் அதிமுகவைச் சோ்ந்த பிச்சாண்டி, பாபு, முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments