கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்த பக்தா்கள்
செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயிலில் 29-ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் காப்புக் கட்டிக்கொண்டு விரதமிருந்து வந்தனா்.
இந்த நிலையில், தைப்பூச விழாவுக்காக கோயிலில் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
பின்னா், கோயில் வளாகத்தில் பக்தா்கள் செக் இழுத்தல், உரல் இழுத்தல், காரைமுள் மீது நடந்து செல்வது, கொதிக்கும் எண்ணெய்யில் இருந்து கையால் வடை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.