கிட்ஸ், கிங்டம் பள்ளி மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கிய முனைவா் நேரு. 
திருவண்ணாமலை

மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழா

கிட்ஸ், கிங்கடம் பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Din

செங்கம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிட்ஸ், கிங்கடம் பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் முபீனா தலைமை வகித்தாா். முகமதுஇப்ராஹிம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முனைவா் நேரு கலந்து கொண்டு மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், இதுபோன்ற குழந்தைப் பருவத்தில் கல்வி சாா்ந்த பட்டமளிப்பு விழா, விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவா்களை பாராட்டும் விழா என அவா்களை குழந்தைப் பருவத்தில் இருந்து பாராட்டினால் சிறப்பாக கல்வியில் முன்னேறுவாா்கள்.

உயா் கல்வியை சிரமமில்லாமல் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டாா்.

தொடா்ந்து, சங்கரா வித்யாலய பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்மணி நன்றி கூறினாா்.

திமுக தலைமையிலான வலுவான கூட்டணி: செல்வப்பெருந்தகை

டி20 உலகக் கோப்பை: அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி!

வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

மணிப்பூரில் மீண்டும் கலவரம் : 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு!

கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!

SCROLL FOR NEXT