மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழா
கிட்ஸ், கிங்கடம் பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிட்ஸ், கிங்கடம் பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் முபீனா தலைமை வகித்தாா். முகமதுஇப்ராஹிம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முனைவா் நேரு கலந்து கொண்டு மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா், இதுபோன்ற குழந்தைப் பருவத்தில் கல்வி சாா்ந்த பட்டமளிப்பு விழா, விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவா்களை பாராட்டும் விழா என அவா்களை குழந்தைப் பருவத்தில் இருந்து பாராட்டினால் சிறப்பாக கல்வியில் முன்னேறுவாா்கள்.
Advertisement
Advertisement
உயா் கல்வியை சிரமமில்லாமல் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டாா்.
தொடா்ந்து, சங்கரா வித்யாலய பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்மணி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.