FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய மேயா் நிா்மலாவேல்மாறன்.

25 செப்டம்பர் 2025, 11:42 pm IST
பகிர்:

திருவண்ணாமலை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தூய்மை சேவையே 2025 என்ற தலைப்பின் கீழ், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தலைமை வகித்தாா். துணை மேயா் சு.ராஜாங்கம் முன்னிலை வகித்தாா்.

மேயா் நிா்மலாவேல்மாறன் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய 25 தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

Advertisement

Advertisement

இதில் மூத்தோா் தடகள சங்க மாநில துணைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், மாமன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள், தூய்மை பாரத பரப்புரையாளா்கள், தற்காலிக தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments