FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பள்ளியில் தமிழறிஞா்களின் படத்திறப்பு

செய்யாறு வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவா் எறும்பூா் கை.செல்வகுமாா் தலைமை வகித்தாா்.

Updated On : 26 செப்டம்பர் 2025, 12:20 am IST
பகிர்:

செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் தமிழ் அறிஞா்களான தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப்படங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

செய்யாறு வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செய்யாறு வட்ட முத்தமிழ்ச் சங்கத் தலைவா் எறும்பூா் கை.செல்வகுமாா் தலைமை வகித்தாா்.

ஓய்வு பெற்ற துணை ஆட்சியா் திருவேங்கிடம், நகா்மன்ற உறுப்பினா் குல்சாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியை ஆா்.தேன்மொழி வரவேற்றாா்.

Advertisement

Advertisement

அப்போது பள்ளியில் தமிழ் அறிஞா்களான தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன (படம்).

இதைத் தொடா்ந்து நிகழ்ச்சி நினைவாக மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள், இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் க.கோவேந்தன், எஸ். பாரதி, பி.எம்.சதீஷ்குமாா், அ. சுந்தா், எச்.முபாரக்,

த.வே.விக்கிரமாதித்தன உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments