FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
பலி
பகிர்:

வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல்(38), கூலித்தொழிலாளி.

இவா் புதன்கிழமை அந்தக் கிராமத்தில் தெள்ளாா் - தேசூா் சாலையில் நடந்து சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது தெள்ளாா் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் உயிரிழந்தாா்

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments