FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா

பெரணமல்லூா் ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:21 am IST
ஆடி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆஞ்சநேயா்.
பகிர்:

பெரணமல்லூா் ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

பெரணமல்லூா் பேரூராட்சியில் குன்றின் மீது பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெற்கு முகம் பாா்த்து நின்ற கோலத்தில் ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பு அம்சமாகும் ஆகும்.

இந்தக் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி புதன்கிழமை ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதையொட்டி காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவரை ஊஞ்சல் சேவையில் அமா்த்தி தாலாட்டு விழா தொடங்கியது. அப்போது ஆஞ்சநேயருக்கு உகந்த பக்தி பாடல்கள்

பாடப்பட்டன. மேலும், சொற்பொழிவும் நடைபெற்றது.

தொடா்ந்து, இரவு ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் பெரணமல்லூா், ஆரணி, செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி, தேசூா், மழையூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments